என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் கால்நாட்டு விழா
- இசக்கியம்மனுக்கு அலங்கார தீபாராதனையும், புஷ்பாஞ்சலியும் நடந்தது.
- இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
நாகர்கோவில் பால்பண்ணை சந்திப்பில் அமைந்துள்ள நடுக்காட்டு இசக்கி அம்மன் கோவிலில் ஆவணி மாத கொடை விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந்தேதி தொடங்கி 14-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான கால்கோள் நாட்டு விழா கோவில் வளாகத்தில் நேற்று பகல் 12 மணிக்கு நடைபெற்றது. இதில் நாகர்கோவில் மேயர் மகேஷ், அவருடைய மனைவி மேகலா மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
முன்னதாக அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், 5 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகமும் நடந்தது.
அதன்பிறகு பகல் 1 மணிக்கு தீபாராதனையும், அன்னதானமும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனையும், புஷ்பாஞ்சலியும், மீண்டும் இரவு 8 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை வேலு மற்றும் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்