என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
மேல்மலையனூரில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி
- அம்மனுக்கும், பஞ்சபாண்டவர்களுக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டது.
- தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது.
மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது.
மேலும் மகா பாரத சொற்பொழிவு, தெரு கூத்து உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக துரியோதனன் படுகள நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கும், பஞ்சபாண்டவர்களுக்கும் பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.
பின்னர் கடைவீதி பகுதியில் பிரம்மாண்டமான துரியோதனன் சிலை செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து மாலையில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்