search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆளூர் தர்கா விழாவில் யானை மீது பிறைக்கொடி ஊர்வலம்
    X

    ஆளூர் தர்கா விழாவில் யானை மீது பிறைக்கொடி ஊர்வலம்

    • இன்று (புதன்கிழமை) இரவு மரிபுக்கு பின் துஆ ஓதி நேர்ச்சை வழங்கப்படுகிறது.
    • நிறைவு நாளான நாளை (வியாழக்கிழமை) இரவு கொடி இறக்கப்பட்டு இனிப்பு வழங்கப்படும்.

    ஆளூரில் பக்ரீத் பண்டிகை முடிந்த 2-வது நாள் அஷ்ஷேய்கு கோஜ் முகமது சாகிபு ஒலியுல்லாஹ் தர்கா பெருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் மாலையில் தொழுகைக்குப்பின் மவுலூது எனும் வாழ்த்துப்பா பாடப்படுகிறது.

    விழாவில் நேற்று பிறை கொடி தாங்கிய 3 யானைகளின் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தின் போது பாரம்பரிய இசைகள் ஒலிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் இன்று (புதன்கிழமை) இரவு மரிபுக்கு பின் துஆ ஓதி நேர்ச்சை வழங்கப்படுகிறது. நிறைவு நாளான நாளை (வியாழக்கிழமை) இரவு கொடி இறக்கப்பட்டு இனிப்பு வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    Next Story
    ×