
இதைத்தொடர்ந்து நேற்று இரவு சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதைத்தொடர்ந்து இன்று(சனிக்கிழமை) யாழி வாகனத்திலும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) அனுமந்த வாகனத்திலும் பெருமாள் புறப்பாடாகிறார். 11-ந்தேதி கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 12-ந்தேதி சேஷ வாகனத்திலும், 13-ந்தேதி யானை வாகனத்திலும் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 14-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று இரவில் புஷ்ப பல்லக்கில் பெருமாள் எழுந்தருளுகிறார். 15-ந்தேதி பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 16-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் சுவாமி தேரில் எழுந்தருளுகிறார். இதைத்தொடர்ந்து 10.35 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், உபயதாரர்கள் செய்துள்ளனர்.