
சிறப்பு விருந்தினர்களாக விசுவ இந்து பரிஷத் மாநில செயலாளர் ரத்தினசுவாமி, தென்குமரி கல்வி கழக தலைவர் காமராஜ், செயலாளர் வெற்றிவேல், நடுவூர்க்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் பாரத், பருத்திவிளை இந்து சமய பேரவை திருக்கோவில் செயலாளர் ராஜகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாலையில் 3008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் முதல் விளக்கை கருமன்கூடல் சரஸ்வதி கல்யாணசுந்தரம் ஏற்றி வைத்தார். நெட்டாங்கோடு சாரதேஸ்வரி ஆசிரமம் யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி விளக்கு பூஜையை நடத்தினார்.
விழாவில் நடுவூர்க்கரை சிவசக்தி கோவில் நிர்வாகிகள் தலைவர் சுந்தரபாலன், செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் சிவராஜ், அமைப்பாளர் முருகன், நிர்வாக குழு உறுப்பினர்கள் நீலகண்டன் நாடார், குமரேசன், சடையன், நாகராஜன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.