search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள்.
    X
    ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள்.

    ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்த வடமாநில பக்தர்கள்

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 3 நாட்கள் தடையை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வடமாநில பக்தர்கள் நேற்று குவிந்தனர்.
    தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக வாரத்தில் வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. 3 நாள் தடை முடிந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் நேற்று முதல் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக் கப்பட்டனர்.

    கொரோனா பரவல் காரணமாக ராமேசுவரம் கோவிலில் 3 நாட்களுக்கு பிறகு கோவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று வடமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். தமிழகத்தை சேர்ந்த பக்தர்களின் எண்ணிக்கை மிகமிக குறைவாகவே காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×