என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
பள்ளிபாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசி விழா
Byமாலை மலர்12 Jan 2022 6:16 AM GMT (Updated: 12 Jan 2022 6:16 AM GMT)
பள்ளிபாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வழங்க 26 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி கரையில் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
நாளை காலை 4 மணிக்கு சுப்ரபாதம் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. 4.30 மணிக்கு மங்கல இசை, 5 மணிக்கு வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜையும், 5.40 மணிக்கு பரமபத வாசல் திறப்பு விழா நிகழ்ச்சியும் நடக்கிறது.
ஆதிகேசவ பெருமாளுக்கு பூக்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வேதமந்திரங்கள், சுப்ரபாதம் ஒலிக்க சிறப்பு பூஜைகளும் நடக்கிறது.
விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுடன் சேர்த்து வெண்பொங்கல், சாம்பார் சாதம், புளி சாதம், தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம், மல்லி சாதம், கேரட் சாதம், மாங்காய் சாதம், மிளகு சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் உள்ளிட்ட பலவகை சாதம் நாள் முழுவதும் வழங்கப்படுகிறது. மேலும் பால் பாயாசம், ரவா கேசரியும் கலவை சாதத்துடன் வழங்கப்படுகிறது.
அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொள்ள விழாக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர். 26-வது ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுவதை குறிப்பிடும் வகையில் 26 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
400 கிலோ சர்க்கரை, 10 கிலோ முந்திரி, 16 கிலோ நெய், 10 கிலோ திராட்சை, 3 கிலோ ஏலக்காய், 180 கிலோ கடலை மாவு, 165 லிட்டர் எண்ணெய் ஆகியவை பயன்படுத்தி 26 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. 50 பணியாளர்கள் இரவு, பகலாக இந்த பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
நாளை காலை 4 மணிக்கு சுப்ரபாதம் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. 4.30 மணிக்கு மங்கல இசை, 5 மணிக்கு வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜையும், 5.40 மணிக்கு பரமபத வாசல் திறப்பு விழா நிகழ்ச்சியும் நடக்கிறது.
ஆதிகேசவ பெருமாளுக்கு பூக்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வேதமந்திரங்கள், சுப்ரபாதம் ஒலிக்க சிறப்பு பூஜைகளும் நடக்கிறது.
விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுடன் சேர்த்து வெண்பொங்கல், சாம்பார் சாதம், புளி சாதம், தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம், மல்லி சாதம், கேரட் சாதம், மாங்காய் சாதம், மிளகு சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் உள்ளிட்ட பலவகை சாதம் நாள் முழுவதும் வழங்கப்படுகிறது. மேலும் பால் பாயாசம், ரவா கேசரியும் கலவை சாதத்துடன் வழங்கப்படுகிறது.
அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொள்ள விழாக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர். 26-வது ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுவதை குறிப்பிடும் வகையில் 26 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
400 கிலோ சர்க்கரை, 10 கிலோ முந்திரி, 16 கிலோ நெய், 10 கிலோ திராட்சை, 3 கிலோ ஏலக்காய், 180 கிலோ கடலை மாவு, 165 லிட்டர் எண்ணெய் ஆகியவை பயன்படுத்தி 26 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. 50 பணியாளர்கள் இரவு, பகலாக இந்த பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X