search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சொர்ண ஆகர்ஷண பைரவர்
    X
    சொர்ண ஆகர்ஷண பைரவர்

    தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
    திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்புவில் பிரசித்தி பெற்ற சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக சொர்ண ஆகர்ஷண பைரவர் உள்ளார். இவருக்கு மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்படும். அதன்படி நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து சந்தனம், மஞ்சள் திருமஞ்சனம், பால், தேன், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சொர்ண ஆகர்ஷண பைரவர் ராஜ அலங்காரத்தி்ல் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    இதுபோல நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×