search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம்
    X
    திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம்

    திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம்

    திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனம் இன்றி முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் கோவிலுக்குள் சுவாமி புறப்பாடு நடந்து வருகிறது. திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடந்தது.

    இதனையொட்டி உற்சவர் சன்னதியில் இருந்து சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் புறப்பட்டு திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமானுக்கு கிரீடம், சேவல் கொடி சாற்றப்பட்டது.

    மேலும் நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் சாற்றி பட்டாபிஷேகம் நடந்தது. இது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. பட்டாபிஷேகத்தை தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    Next Story
    ×