என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கடலூர் வண்டிப்பாளையம் சிவசுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்
Byமாலை மலர்6 Nov 2021 5:59 AM GMT (Updated: 6 Nov 2021 5:59 AM GMT)
கடலூர் வண்டிப்பாளையம் சிவசுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடலூர் வண்டிப்பாளையத்தில் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி விநாயகர் விழா, மூஷிக வாகனத்தில் வீதி உலா, புற்றுமண் வழிபாடு ஆகியவை நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு கோவில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து அபிஷேக ஆராதனை, விமானத்தில் வீதி உலா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (சனிக்கிழமை) இடும்பன் வாகன வீதி உலா, காமதேனு வாகனத்தில் வீதி உலா நடக்கிறது.
வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பல்லக்கில் வீதி உலா, வீரபாகு சிறைமீட்டல், தாரகன் வதம், சக்திவேல் பெறும் விழா நடக்கிறது. 10-ந்தேதி (புதன்கிழமை) வீரபாகு தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, காலை 8 மணிக்கு சஷ்டி மகா அபிஷேகம், வீரபாகு தூது, சிங்கமுகன் வதம், இரவு 10 மணி அளவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள். மறுநாள் (வியாழக்கிழமை) திருக்கல்யாணம், சாமி வீதி உலா மற்றும் கொடி இறக்க நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது.
இதேபோல் கடலூர் பாடலீஸ்வரர்கோவிலில் உள்ள முருகன் சன்னதியிலும் கந்தசஷ்டி விழா கொடியேற்றத் துடன் தொடங்கியது. முன்னதாக சாமிக்கு அலங்காரம், தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
தொடர்ந்து அபிஷேக ஆராதனை, விமானத்தில் வீதி உலா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (சனிக்கிழமை) இடும்பன் வாகன வீதி உலா, காமதேனு வாகனத்தில் வீதி உலா நடக்கிறது.
வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பல்லக்கில் வீதி உலா, வீரபாகு சிறைமீட்டல், தாரகன் வதம், சக்திவேல் பெறும் விழா நடக்கிறது. 10-ந்தேதி (புதன்கிழமை) வீரபாகு தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, காலை 8 மணிக்கு சஷ்டி மகா அபிஷேகம், வீரபாகு தூது, சிங்கமுகன் வதம், இரவு 10 மணி அளவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள். மறுநாள் (வியாழக்கிழமை) திருக்கல்யாணம், சாமி வீதி உலா மற்றும் கொடி இறக்க நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது.
இதேபோல் கடலூர் பாடலீஸ்வரர்கோவிலில் உள்ள முருகன் சன்னதியிலும் கந்தசஷ்டி விழா கொடியேற்றத் துடன் தொடங்கியது. முன்னதாக சாமிக்கு அலங்காரம், தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X