search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கும்பாபிஷேகம் நடந்ததையும், விழாவில் பங்கேற்ற பக்தர்களையும் படத்தில் காணலாம்.
    X
    கும்பாபிஷேகம் நடந்ததையும், விழாவில் பங்கேற்ற பக்தர்களையும் படத்தில் காணலாம்.

    நல்லம்பள்ளி பண்ணாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    நல்லம்பள்ளி அருகே பண்ணாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த ஆத்துக்கொட்டாய் கிராமத்தில் பால விநாயகர், பண்ணாரி மாரியம்மன், ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டன. இந்த கோவில் கும்பாபிஷேக விழா தொடங்கி நடந்து வந்தது.

    தொடர்ந்து கணபதி, லட்சுமி, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உள்பட பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. பின்னர் மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் முக்கிய நாளான நேற்று யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் பால விநாயகர், பண்ணாரி மாரியம்மன், ஆஞ்சநேயர் கோவில் விமான கோபுர கலசங்கள் மற்றும் மூலவர்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. விழாவில் ஆத்துக்கொட்டாய் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×