என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தங்கரத தேரோட்டம் நடத்த வேண்டும் கோரிக்கை
Byமாலை மலர்25 Oct 2021 9:00 AM GMT (Updated: 25 Oct 2021 9:00 AM GMT)
கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தங்கரத தேரோட்டம் நடைபெறாமல் இருந்து வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தங்கரத தேரோட்டம் நடைபெறாமல் இருந்து வருகிறது. இதனால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்தநிலையில் பழனி தண்டாயுதபாணி கோவிலில் தங்கரத புறப்பாடு நடந்தது. அதுபோல் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலிலும் தங்கரத புறப்பாடு நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தங்கரதத்தில் பவனி வரும் அர்த்தநாரீஸ்வரர் சாமிக்கு மோட்டார் தொழில் முன்னேற்ற சங்கம் சார்பில் வைர கிரீடம் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக அந்த வைர கிரீடம் சாமிக்கு அணிவிக்கப்படுவதில்லை. இதனால் காணிக்கை அளித்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே தங்கரத புறப்பாட்டின்போது வைர கிரீடத்தை சாமிக்கு அணிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் தங்கரதத்தில் பவனி வரும் அர்த்தநாரீஸ்வரர் சாமிக்கு மோட்டார் தொழில் முன்னேற்ற சங்கம் சார்பில் வைர கிரீடம் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக அந்த வைர கிரீடம் சாமிக்கு அணிவிக்கப்படுவதில்லை. இதனால் காணிக்கை அளித்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே தங்கரத புறப்பாட்டின்போது வைர கிரீடத்தை சாமிக்கு அணிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X