என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மேட்டுப்பாளையம் அருகே மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்25 Oct 2021 7:35 AM GMT (Updated: 25 Oct 2021 7:35 AM GMT)
விமான கோபுரம் கலசம், மாகாளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் கலச நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்து அருளாசி வழங்கினர்.
மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை லிங்காபுரத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி திருப்பணிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
யாகசாலை அமைத்து திருக்குடங்களில் அருள் சக்திகளை எழுந்தருள செய்தல், விமான கலசம் நிறுவுதல், முதல் கால வேள்வி பூஜை ஆகியவை நடைபெற்றன. நேற்று அதிகாலை 5.45 மணிக்கு 2-ம் கால வேள்வி பூஜை, காலை 8 மணிக்கு யாகசாலையில் இருந்து மூல மூர்த்திக்கு அருள்நிலை ஏற்றுதல், மகா தீபாராதனைக்கு பிறகு யாகசாலையில் இருந்து தீர்த்த கலசங்கள் நாதஸ்வரம், இசைமேள தாளம் முழங்க கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டது.
விமான கோபுரம் கலசம், மாகாளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் கலச நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்து அருளாசி வழங்கினர்.
பேரூர் ஆதீனம் சாந்தலிங்கர் அருள்நெறி மன்றம், குழந்தைவேல், சக்திவேல் ஆகியோர் சிறப்பு பூஜைகளை செய்தனர். விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
யாகசாலை அமைத்து திருக்குடங்களில் அருள் சக்திகளை எழுந்தருள செய்தல், விமான கலசம் நிறுவுதல், முதல் கால வேள்வி பூஜை ஆகியவை நடைபெற்றன. நேற்று அதிகாலை 5.45 மணிக்கு 2-ம் கால வேள்வி பூஜை, காலை 8 மணிக்கு யாகசாலையில் இருந்து மூல மூர்த்திக்கு அருள்நிலை ஏற்றுதல், மகா தீபாராதனைக்கு பிறகு யாகசாலையில் இருந்து தீர்த்த கலசங்கள் நாதஸ்வரம், இசைமேள தாளம் முழங்க கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டது.
விமான கோபுரம் கலசம், மாகாளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் கலச நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்து அருளாசி வழங்கினர்.
பேரூர் ஆதீனம் சாந்தலிங்கர் அருள்நெறி மன்றம், குழந்தைவேல், சக்திவேல் ஆகியோர் சிறப்பு பூஜைகளை செய்தனர். விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X