என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மீனாட்சி அம்மன் சிவ பூஜை அலங்காரத்தில் காட்சி
Byமாலை மலர்15 Oct 2021 4:48 AM GMT (Updated: 15 Oct 2021 4:48 AM GMT)
நவராத்திரி விழாவில் சரஸ்வதி பூஜை தினமான நேற்று, மீனாட்சி அம்மன் சிவபூஜை அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதையொட்டி அம்மனுக்கு மாலையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக நடைபெறும் ஆடி முளைக்கொட்டு, நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை.
இந்த ஆண்டுக்கான நவராத்திரி உற்சவ விழா கடந்த 7-ந் தேதி தொடங்கி நாளை (15-ந் தேதி) வரை நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் மாலை 6 மணி இரவு 8.30 மணி வரை மூலவர் மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெற்று வருகிறது.
நவராத்திரி திருவிழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி அம்மன் எழுந்தருளி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சி தருகிறார். அதன்படி நேற்று மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார். அதனை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
நவராத்திரி விழாவில் சரஸ்வதி பூஜை தினமான நேற்று, மீனாட்சி அம்மன் சிவபூஜை அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதையொட்டி அம்மனுக்கு மாலையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இன்று (15-ந் தேதி) விஜயதசமி தினத்தன்று சடையலம்புதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. அதையொட்டி பொற்றாமரை குளத்தில் உள்ள மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி சடையலம்புதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின்னர் தீபாராதனையுடன் நவராத்திரி விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
இந்த ஆண்டுக்கான நவராத்திரி உற்சவ விழா கடந்த 7-ந் தேதி தொடங்கி நாளை (15-ந் தேதி) வரை நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் மாலை 6 மணி இரவு 8.30 மணி வரை மூலவர் மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெற்று வருகிறது.
நவராத்திரி திருவிழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி அம்மன் எழுந்தருளி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சி தருகிறார். அதன்படி நேற்று மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார். அதனை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
நவராத்திரி விழாவில் சரஸ்வதி பூஜை தினமான நேற்று, மீனாட்சி அம்மன் சிவபூஜை அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதையொட்டி அம்மனுக்கு மாலையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இன்று (15-ந் தேதி) விஜயதசமி தினத்தன்று சடையலம்புதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. அதையொட்டி பொற்றாமரை குளத்தில் உள்ள மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி சடையலம்புதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின்னர் தீபாராதனையுடன் நவராத்திரி விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X