என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சோட்டப்பணிக்கன் தேரிவிளை முத்தாரம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை
Byமாலை மலர்13 Oct 2021 5:58 AM GMT (Updated: 13 Oct 2021 5:58 AM GMT)
தேரிவிளை முத்தாரம்மன் கோவிலில் அம்மனுக்கு பூஜை, கொலுவுக்கு பூஜை, பிரசாதம் வழங்குதல் நடந்தது. நிறைவு நாள் விழா 14-ந்தேதி நடைபெறுகிறது.
தென்தாமரைகுளம் அருகில் உள்ள சோட்டப்பணிக்கன் தேரிவிளை தேவி முத்தாரம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 7-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. முதல் நாள் மாலை நடை திறப்பு, இரவு நவராத்திரி கொலு வைத்தல், அம்மன் மற்றும் கொலுவுக்கு பூஜை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது.
5-ம் நாளான்று இரவு 7 மணிக்கு 300 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை நடந்தது. சுமங்கலி பூஜைக்கு கரும்பாட்டூர் ஊராட்சி தலைவி தங்கமலர் சிவபெருமான் தலைமை தாங்கினார். தொடர்ந்து அம்மனுக்கு பூஜை, கொலுவுக்கு பூஜை, இரவு 8 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நடந்தது. நிறைவு நாள் விழா 14-ந்தேதி நடைபெறுகிறது.
அன்று காலை 9 மணிக்கு விளையாட்டு போட்டிகள், மாலை 4 மணிக்கு இளைஞர்களுக்கான கபடி போட்டியும், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு அம்மன் மற்றும் கொலு பூஜை, பிரசாதம் வழங்குதல், இரவு 9 மணிக்கு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சோட்டப்பணிக்கன் தேரிவிளை ஊர் தலைவர் சிவபெருமான் பரிசு வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை நவராத்திரி விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
5-ம் நாளான்று இரவு 7 மணிக்கு 300 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை நடந்தது. சுமங்கலி பூஜைக்கு கரும்பாட்டூர் ஊராட்சி தலைவி தங்கமலர் சிவபெருமான் தலைமை தாங்கினார். தொடர்ந்து அம்மனுக்கு பூஜை, கொலுவுக்கு பூஜை, இரவு 8 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நடந்தது. நிறைவு நாள் விழா 14-ந்தேதி நடைபெறுகிறது.
அன்று காலை 9 மணிக்கு விளையாட்டு போட்டிகள், மாலை 4 மணிக்கு இளைஞர்களுக்கான கபடி போட்டியும், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு அம்மன் மற்றும் கொலு பூஜை, பிரசாதம் வழங்குதல், இரவு 9 மணிக்கு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சோட்டப்பணிக்கன் தேரிவிளை ஊர் தலைவர் சிவபெருமான் பரிசு வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை நவராத்திரி விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X