search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன்
    X
    முருகன்

    சோலைமலையில் சஷ்டி பூஜை பக்தர்கள் தரிசனம்

    சோலைமலை முருகன் கோவிலில் புரட்டாசி மாத சஷ்டியை முன்னிட்டு மூலவர் வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வித்தக விநாயகர் மற்றும் ஆதிவேல்சன்னதியிலும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
    அழகர்மலை உச்சியில் உள்ளது முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோவிலில் புரட்டாசி மாத சஷ்டி பூஜைகள் நடந்தது. இதில் மூலவர் வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வித்தக விநாயகர் மற்றும் ஆதிவேல்சன்னதியிலும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து சஷ்டி மண்ட பத்தில் உற்சவர் வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கு பால் பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும் சர விளக்கு தீபாராதனைகளும் நடந்தது. அரசு வழிகாட்டுதல்படி பக்தர்கள் கலந்துகொண்டு நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×