search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வரதராஜ பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சி
    X
    வரதராஜ பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சி

    அரியூர் வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி

    லால்குடியை அடுத்த அரியூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
    லால்குடியை அடுத்த அரியூர் கிராமத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடப்பது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனையொட்டி லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், மாப்பிள்ளை அழைப்பு, சீர்வரிசை எடுத்தல், எஜமான சங்கல்பம், முளைப்பாரி எடுத்தல், மாலை மாற்றுதல், கன்னிகாதானம் உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. பின்னர், திருக்கல்யாணம், மாப்பிள்ளை தாரணம், தீபாராதனையும், விருச்சக லக்னத்தில் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.

    இதில் லால்குடி, அரியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×