search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாட்டுமடம் மாரியம்மன்
    X
    நாட்டுமடம் மாரியம்மன்

    வேதாரண்யம் நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் புரட்டாசி திருவிழா

    வேதாரண்யம் நகரில் உள்ள நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் மாரியம்மனுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழாவில் அம்மன் வீதி உலா நடைபெறுவது வழக்கம்.
    வேதாரண்யம் நகரில் நாட்டுமடம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாரியம்மனுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழாவில் அம்மன் வீதி உலா நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் புரட்டாசி திருவிழாவில் அம்மன் வீதிஉலா இல்லாமல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் வழிபாடு நடைபெற உள்ளது.

    இந்த ஆண்டு திருவிழா வருகிற அக்டோபர் 1-ந்தேதி தொடங்குகிறது. விழாவைமுன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் முக கவசங்கள் அணிந்து சமூக இடைவெளி விட்டு சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
    Next Story
    ×