search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அய்யனார்
    X
    அய்யனார்

    கண்ணங்குடி அருகே அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை

    இந்து சமய அறநிலையத்துறை இந்த 2 கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்தி பக்தர்கள் சாமி கும்பிட ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    தேவகோட்டை அருகே உள்ளது கே. சிறுவனூர் கிராமம். இந்தக் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்த மான ஆற்றங்கரை அய்யனார் கோவில் மற்றும் குடிவாழ வந்த அம்மன் கோவில்கள் உள்ளன.

    இந்த கோவில்களுக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. இந்தநிலையில் அந்த கோவில் மிகவும் பாழடைந்து சாமி கும்பிட முடியாத நிலை ஏற்பட்டது. கிராம மக்கள் அந்த கோவிலை கட்டி எழுப்ப முயன்றனர்.

    ஆனால் அவை பாதியிலேயே நின்று விட்டது. எனவே இந்து சமய அறநிலையத்துறை அந்த 2 கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்தி பக்தர்கள் சாமி கும்பிட ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இந்த கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பூசாரி சுப்பையா மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×