search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மேல ஆத்தூர் அருகே மரந்தலை மாடசாமி கோவில் கொடை விழா
    X
    மேல ஆத்தூர் அருகே மரந்தலை மாடசாமி கோவில் கொடை விழா

    மேல ஆத்தூர் அருகே மரந்தலை மாடசாமி கோவில் கொடை விழா

    மேல ஆத்தூர் அருகே உள்ள மரந்தலை மாடசாமி கோவில் கொடை விழா 3 நாட்கள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    மேல ஆத்தூர் அருகே உள்ள மரந்தலை மாடசாமி கோவில் கொடை விழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் மாலையில் குடிஅழைப்பு, அதனைத் தொடர்ந்து திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

    இரவில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. 2-ம் நாள் அதிகாலையில் மகா கணபதி ஹோமம், சிற்றாற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம், அன்னதானம் நடந்தது. அன்னதானத்தை மேல ஆத்தூரை சேர்ந்த சென்னை தொழிலதிபர் ஜெயமுருகன் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து இரவு வில்லிசை, இரவு 12 மணிக்கு சாமக்கொடை, வாணவேடிக்கை நடைபெற்றது.

    மூன்றாம் நாள் காலையில் சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் விடுதல் நடந்தது. பின்னர் மதியக் கொடை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×