search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சங்கரன்குடியிருப்பு அய்யா கோவில் திருவிழா
    X
    சங்கரன்குடியிருப்பு அய்யா கோவில் திருவிழா

    சங்கரன்குடியிருப்பு அய்யா கோவில் திருவிழா

    சாத்தான்குளம் சங்கரன்குடியிருப்பு ஸ்ரீமன் நாராயணசுவாமி நிழல் தாங்கலில் இந்திர விமான வாகனத்தில் அய்யா வைகுண்டர் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி கொடுத்தார்.
    சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பு ஸ்ரீமன் நாராயணசுவாமி நிழல் தாங்கலில் புரட்டாசி திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் காலை, மாலையில் பணிவிடையும், தொடர்ந்து அன்னதர்மம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவில் இந்திர விமான வாகனத்தில் அய்யா வைகுண்டர் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி கொடுத்தார். நகர் வலம் முடிந்து அய்யா பள்ளி அமர்ந்தார்.

    தொடர்ந்து வெளியூர் தர்மம் எடுக்கும் வைபவம் நடைபெற்றது. 2-ஆம் நாள் சிறப்பு பணிவிடை நடைபெற்றது. மாலைில் அய்யா வைகுண்டர் கருட வாகனத்தில் எழுந்தருளி உலா வந்து அருள்காட்சி கொடுத்தார். 3-ஆம்நாளில் காலை, மாலையில் சிறப்பு பணிவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து உள்ளூர் தர்மம் எடுக்கும் வைபவம் நடைபெற்றது. இரவு அய்யா வைகுண்டர் அன்ன வாகனத்தில் எழுந்தருளி நகர் வலம் வந்தார். பக்தர்களுக்கு அருள்காட்சி கொடுத்தார். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×