என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சங்கரன்குடியிருப்பு அய்யா கோவில் திருவிழா
Byமாலை மலர்23 Sep 2021 5:37 AM GMT (Updated: 23 Sep 2021 5:37 AM GMT)
சாத்தான்குளம் சங்கரன்குடியிருப்பு ஸ்ரீமன் நாராயணசுவாமி நிழல் தாங்கலில் இந்திர விமான வாகனத்தில் அய்யா வைகுண்டர் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி கொடுத்தார்.
சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பு ஸ்ரீமன் நாராயணசுவாமி நிழல் தாங்கலில் புரட்டாசி திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் காலை, மாலையில் பணிவிடையும், தொடர்ந்து அன்னதர்மம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவில் இந்திர விமான வாகனத்தில் அய்யா வைகுண்டர் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி கொடுத்தார். நகர் வலம் முடிந்து அய்யா பள்ளி அமர்ந்தார்.
தொடர்ந்து வெளியூர் தர்மம் எடுக்கும் வைபவம் நடைபெற்றது. 2-ஆம் நாள் சிறப்பு பணிவிடை நடைபெற்றது. மாலைில் அய்யா வைகுண்டர் கருட வாகனத்தில் எழுந்தருளி உலா வந்து அருள்காட்சி கொடுத்தார். 3-ஆம்நாளில் காலை, மாலையில் சிறப்பு பணிவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து உள்ளூர் தர்மம் எடுக்கும் வைபவம் நடைபெற்றது. இரவு அய்யா வைகுண்டர் அன்ன வாகனத்தில் எழுந்தருளி நகர் வலம் வந்தார். பக்தர்களுக்கு அருள்காட்சி கொடுத்தார். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.
தொடர்ந்து வெளியூர் தர்மம் எடுக்கும் வைபவம் நடைபெற்றது. 2-ஆம் நாள் சிறப்பு பணிவிடை நடைபெற்றது. மாலைில் அய்யா வைகுண்டர் கருட வாகனத்தில் எழுந்தருளி உலா வந்து அருள்காட்சி கொடுத்தார். 3-ஆம்நாளில் காலை, மாலையில் சிறப்பு பணிவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து உள்ளூர் தர்மம் எடுக்கும் வைபவம் நடைபெற்றது. இரவு அய்யா வைகுண்டர் அன்ன வாகனத்தில் எழுந்தருளி நகர் வலம் வந்தார். பக்தர்களுக்கு அருள்காட்சி கொடுத்தார். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X