search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நடந்த போது எடுத்த படம்
    X
    கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நடந்த போது எடுத்த படம்

    கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி விழா திரளான பெண்கள் பங்கேற்பு

    கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி விழா நேற்று நடந்தது. இதில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.
    கன்னியாகுமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை சார்பாக முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி விழா

    நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமுத்திர அபிஷேகம், அலங்காரம், நெய்வேத்தியம், தீப ஆரத்தி ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு ஆரத்தி எடுத்தனர்.

    வெள்ளிமலை விவேகானந்தா ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தஜி தலைமையில் நடைபெற்றது.

    முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தியை பெருங்குளம் செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞானபிரமாச்சாரிய சுவாமிகள், வேளச்சேரி ஆதீனம் திருமடம், திருப்புகலூர் நாகப்பட்டினம் சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் சிவஞான பானு, ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., பச்சைமால், கன்னியாகுமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை தலைவர் எஸ்.ராஜகோபால், பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம் பிள்ளை, பொருளாளர் காமராஜ், சைவசித்தாந்த கனகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×