search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வசந்த விநாயகர்
    X
    வசந்த விநாயகர்

    நத்தக்காடையூர் அருகே வசந்த விநாயகர் கோவில் ஆண்டு விழா

    நத்தக்காடையூர் வசந்த விநாயகர் கோவிலின் 12- வது கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு விநாயகருக்கு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது.
    நத்தக்காடையூர் அருகே உள்ள வசந்தநகர் வசந்த விநாயகர் கோவிலின் 12- வது கும்பாபிஷேக ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் நேற்று காலை 11 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர்.தொடர்ந்து நேற்று இரவு 8 மணிக்கு மகா சிறப்பு கணபதி ஹோம பூஜை நடைபெற்றது. தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு வசந்த விநாயகருக்கு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவில் நத்தக்காடையூர், வசந்தநகர் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×