search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மெலட்டூர் சித்திபுத்தி விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம் பக்தர்கள் இன்றி நடந்தது
    X
    மெலட்டூர் சித்திபுத்தி விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம் பக்தர்கள் இன்றி நடந்தது

    மெலட்டூர் சித்திபுத்தி விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம் பக்தர்கள் இன்றி நடந்தது

    மெலட்டூர் சித்திபுத்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி, அம்பாள் சித்தி-புத்தியுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.
    மெலட்டூரில் சித்தி புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு்க்கான விழா கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

    விழா நாட்களில் சாமி வீதி உலா உள்பட பல நிகழ்ச்சிகள் கோவில் உள் பிரகாரத்தில் எளிமையாக நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி, அம்பாள் சித்தி-புத்தியுடன் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது.

    விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. விழாக்குழுவினர் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் மட்டுமே திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×