search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆஞ்சநேயருக்கு 508 கிலோ துளசி அலங்காரம்
    X
    ஆஞ்சநேயருக்கு 508 கிலோ துளசி அலங்காரம்

    ஆஞ்சநேயருக்கு 508 கிலோ துளசி அலங்காரம்

    கும்பகோணம் 11 அடி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 508 கிலோ துளசி மற்றும் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
    கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலை காமராஜ் நகர் பகுதியில் விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    நேற்று ஆவணி மாத மகாலய அமாவாசையை முன்னிட்டு 11 அடி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 508 கிலோ துளசி மற்றும் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில்நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு குறைய வேண்டியும், காவிரி டெல்டா மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் வழிபாடு நடைபெற்றது.
    Next Story
    ×