search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அதியமான்கோட்டை அருகே வலம்புரி வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
    X
    அதியமான்கோட்டை அருகே வலம்புரி வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

    அதியமான்கோட்டை அருகே வலம்புரி வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

    அதியமான்கோட்டை வலம்புரி வரசித்தி விநாயகர் கோவிலில் கணபதி, லட்சுமி, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
    அதியமான்கோட்டை அருகே என்.ஜி.ஜி.ஓ. நகரில் உள்ள வலம்புரி வரசித்தி விநாயகர் கோவிலில் மூலவர் மற்றும் பால ஆஞ்சநேயர், பாலமுருகன், தட்சணாமூர்த்தி, அஷ்டபுஜ துர்க்கை மற்றும் நவக்கிரக சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து கோவில் கும்பாபிஷேகம் கடந்த 29-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து கணபதி, லட்சுமி, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக கும்பாபிஷேகம் நடந்தது. அன்றைய தினம் யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன.

    பின்னர் வலம்புரி வரசித்தி விநாயகர் விமான கோபுர கலசம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×