search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வாய்மேடு சிவசக்தி விநாயகர்-வேம்படி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு
    X
    வாய்மேடு சிவசக்தி விநாயகர்-வேம்படி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு

    வாய்மேடு சிவசக்தி விநாயகர்-வேம்படி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு

    நாகை சிவசக்தி விநாயகர், வேம்படி மாரியம்மன் கோலில் குடமுழுக்கு நடைபெற்றது. விழாவையொட்டி விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
    நாகை மாவட்டம் வாய்மேடு சிந்தாமணிகாடு பகுதியில் சிவசக்தி விநாயகர், வேம்படி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோலில் நேற்று குடமுழுக்கு நடைபெற்றது. விழாவையொட்டி விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    நேற்று காலை கடம் புறப்பாடு நடைபெற்று, விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. தொடர்ந்து சிவசக்தி விநாயகர் மற்றும் வேம்படி மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கவுதமன் உள்ளிட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
    Next Story
    ×