என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மழுவேந்தி கருப்பர் கோவில் ஆடித்திருவிழா: 6 அடி நீள அரிவாள் மீது ஏறி ஊர்வலமாக வந்த சாமியாடி
Byமாலை மலர்19 Aug 2021 4:07 AM GMT (Updated: 19 Aug 2021 4:07 AM GMT)
கிருங்காக்கோட்டை, பிள்ளையார்பட்டி, வேங்கைப்பட்டி, பிள்ளையார்நத்தம், பிரான்மலை பகுதி மருத்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மேலப்பட்டி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் இருந்து மழுவேந்தி கருப்பரை அழைத்து வந்தனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி கீழத்தெருவில் உள்ள மழுவேந்தி கருப்பர் கோவில் ஆடித் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். கடந்த ஆண்டு கொரானா பரவல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டு கொரானா பரவல் குறைந்த நிலையில் மழுவேந்தி கருப்பர் கோவில் ஆடி அருவா திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி கிருங்காக்கோட்டை, பிள்ளையார்பட்டி, வேங்கைப்பட்டி, பிள்ளையார்நத்தம், பிரான்மலை பகுதி மருத்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மேலப்பட்டி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் இருந்து மழுவேந்தி கருப்பரை அழைத்து வந்தனர். பின்னர் 6 அடி நீளமுள்ள 2 அரிவாள்கள் மீது ஏறி சாமியாடிய படி 8 கி.மீ. தூரம் ஊர்வலமாக சிங்கம்புணரி நாவிதர் ஊரணி வந்தடைந்தனர்.
அங்கிருந்து கரகம் எடுத்து சிங்கம்புணரி-காரைக்குடி சாலை பெரிய கடை வீதி பகுதி வழியாக கீழத் தெருவில் உள்ள மழுவேந்தி கருப்பர் கோவிலை வந்தடைந்தனர். அங்கு இரவு 10 மணிக்கு கிடா வெட்டி வழிபாடு நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருத்துவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.
இதையொட்டி கிருங்காக்கோட்டை, பிள்ளையார்பட்டி, வேங்கைப்பட்டி, பிள்ளையார்நத்தம், பிரான்மலை பகுதி மருத்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மேலப்பட்டி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் இருந்து மழுவேந்தி கருப்பரை அழைத்து வந்தனர். பின்னர் 6 அடி நீளமுள்ள 2 அரிவாள்கள் மீது ஏறி சாமியாடிய படி 8 கி.மீ. தூரம் ஊர்வலமாக சிங்கம்புணரி நாவிதர் ஊரணி வந்தடைந்தனர்.
அங்கிருந்து கரகம் எடுத்து சிங்கம்புணரி-காரைக்குடி சாலை பெரிய கடை வீதி பகுதி வழியாக கீழத் தெருவில் உள்ள மழுவேந்தி கருப்பர் கோவிலை வந்தடைந்தனர். அங்கு இரவு 10 மணிக்கு கிடா வெட்டி வழிபாடு நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருத்துவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X