search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மாரியம்மன் கோவிலுக்கு பால் குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
    X
    மாரியம்மன் கோவிலுக்கு பால் குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

    மாரியம்மன் கோவிலுக்கு பால் குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

    ராமநத்தம் அடுத்த வைத்தியநாதபுரத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
    ராமநத்தம் அடுத்த வைத்தியநாதபுரத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக ஊரில் உள்ள குளக்கரையில் இருந்து பக்தர்கள் பால்குடங்களை சுமந்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் அருள்பாலிக்க மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தொழுதூரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கும் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    Next Story
    ×