search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முத்துமாரியம்மன்
    X
    முத்துமாரியம்மன்

    முத்துமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா

    திருவாடானை தென்கிழக்கு தெரு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் தினமும் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை, பொங்கல் வைபவம் நடைபெற்றது,
    திருவாடானை தென்கிழக்கு தெரு முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. 8 நாட்கள் திருவிழாவில் தினமும் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை, பொங்கல் வைபவம் நடைபெற்றது, நிறைவு நாளையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனைகளும் பொங்கல் வைபவம், கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி மற்றும் முளைக்கொட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அம்மன் மஞ்சள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அதனைத் தொடர்ந்து பக்தர்கள் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பூஜைகளை பூசாரி ராஜரத்தினம் நடத்தினார்‌.ஏற்பாடுகளை தென் கிழக்கு தெரு விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
    Next Story
    ×