search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நடராஜர்- சிவகாம சுந்தரி சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்
    X
    நடராஜர்- சிவகாம சுந்தரி சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்

    ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜர்- சிவகாம சுந்தரி சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்

    மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜர், சிவகாம சுந்தரி சாமிகளுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜர், சிவகாம சுந்தரி சாமிகளுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், இளநீர், கரும்புசாறு மற்றும் பன்னீர் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர் அலங்காரம் செய்து சிவகாமசுந்தரி உடன் நடராஜருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றி சமூக இடைவெளியுடன், சாமி தரிசனம்செய்தனர்.

    இதேேபால் பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவையொட்டி சிவகாமசுந்தரி உடனுறை நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×