search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி பட்டத்து விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத் தில் சிவபெருமான்.
    X
    பழனி பட்டத்து விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத் தில் சிவபெருமான்.

    பழனி பட்டத்து விநாயகர் கோவிலில் பிரதோஷ பூஜை

    நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் உள்ள நந்தி சிலைக்கு பால், இளநீர், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன், விபூதி உள்பட 16 வகையான அபிஷேகம், நடந்தது.
    நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் உள்ள நந்தி சிலைக்கு நேற்று பிரதோஷ பூஜை நடந்தது. அதையொட்டி பால், இளநீர், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன், விபூதி உள்பட 16 வகையான அபிஷேகம், நடந்தது. மூலவர் கைலாசநாதர், செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.

    இதுபோல பழனி முருகன் கோவிலின் உப கோவிலான பெரியாவுடையார் கோவிலில் நேற்று மாலை சிவபெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு நந்தி பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகை அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பழனி பெரியநாயகி அம்மன் கோவில், பட்டத்து விநாயகர் கோவில் மற்றும் மலைக் கோவிலில், சிவபெருமானுக்கு 16 வகை அபிஷேகம் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×