search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பைரவர் சிறப்பு வழிபாடு
    X
    பைரவர் சிறப்பு வழிபாடு

    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு

    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு பால், பழம், சந்தனம் உள்பட 16 வகையான அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
    தேய்பிறை அஷ்டமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு பால், பழம், சந்தனம் உள்பட 16 வகையான அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

    கொரோனா பரவல் தொற்று காரணமாக கோவில் நடை அடைக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த வழிபாட்டில் கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அதேபோல் கொரோனா பரவல் தொற்று காரணமாக திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடை அடைக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் கோவிலின் முன்பு கூடிய சில பெண் பக்தர்கள் மஞ்சளால் அம்மனை பிரதிஷ்டை செய்து விளக்கேற்றி வழிபட்டனர்.
    Next Story
    ×