search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அரியானூர் மகாகணபதிக்கு சங்கடகர சதுர்த்தியையொட்டி வெள்ளிக்கவச அலங்காரம்
    X
    அரியானூர் மகாகணபதிக்கு சங்கடகர சதுர்த்தியையொட்டி வெள்ளிக்கவச அலங்காரம்

    அரியானூர் மகாகணபதிக்கு சங்கடகர சதுர்த்தியையொட்டி வெள்ளிக்கவச அலங்காரம்

    அரியானூர் மகாகணபதி கோவிலில் சங்கடகர சதுர்த்தியையொட்டி சாமிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டது.
    ஆனி மாத சங்கட ஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தப்படுவது வழக்கம். அரியானூர் மகாகணபதி கோவிலில் சங்கடகர சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, தேன், பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு அருகம்புல் உள்ளிட்ட பல்வேறு மாலைகள் சாத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள வேத மந்திரங்கள் முழங்க நடந்தது.

    இதில் கலந்து கொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    Next Story
    ×