search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தசரதலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம்
    X
    தசரதலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம்

    பவுர்ணமியை முன்னிட்டு தசரதலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம்

    உத்தமர்கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு தசரதலிங்கம் மற்றும் மூலவர் பிச்சாண்டேஸ்வரருக்கு முக்கனி அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
    திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு தசரதலிங்கம் மற்றும் மூலவர் பிச்சாண்டேஸ்வரருக்கு முக்கனி அபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக தசரதலிங்கத்திற்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து மூலவர் பிச்சாண்டேஸ்வரருக்கு முக்கனி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
    Next Story
    ×