search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாலக்கோடு அருகே காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
    X
    பாலக்கோடு அருகே காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

    பாலக்கோடு அருகே காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

    பாலக்கோடு அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தில் காளியம்மன், விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 17-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.
    பாலக்கோடு அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தில் காளியம்மன், விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 17-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. விழாவையொட்டி பால் குட ஊர்வலம் நடந்தது. நேற்று அதிகாலை கலச பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன.

    தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக கோவிலை சுற்றி எடுத்து செல்லப்பட்டது. பின்னர் கோபுர கலசம் மற்றும் காளியம்மன், மாரியம்மன், பரிவார மூர்த்திகளுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு தீபாராதனை மற்றும் அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

    கொரோனா காலம் என்பதால் பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாகுழுவினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×