search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பண்டாரவாடை குடமுருட்டி ஆற்றில்காவிரி நீரை வரவேற்று சிறப்பு பூஜை
    X
    பண்டாரவாடை குடமுருட்டி ஆற்றில்காவிரி நீரை வரவேற்று சிறப்பு பூஜை

    பண்டாரவாடை குடமுருட்டி ஆற்றில்காவிரி நீரை வரவேற்று சிறப்பு பூஜை

    பாபநாசம் அருகே பண்டாரவாடை குடமுருட்டி ஆற்றுக்கு வந்த தண்ணீரை வரவேற்கும் வகையிலும், விவசாயம் செழிக்கவும், உலக நலனுக்காகவும் தண்ணீருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
    கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக காவிரி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் பாபநாசம் அருகே பண்டாரவாடை குடமுருட்டி ஆற்றுக்கு வந்தது.

    இந்த தண்ணீரை வரவேற்கும் வகையிலும், விவசாயம் செழிக்கவும், உலக நலனுக்காகவும் தண்ணீருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் பாபநாசம் கிளை இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர்கள் த.நவநீத கிருஷ்ணன், சிவசக்தி ராஜா உள்பட பலர் பங்கேற்றனர். சிறப்பு பூஜைகளை கங்காதரன், கோடீஸ்வரன் ஆகியோர் செய்து இருந்தனர்.
    Next Story
    ×