search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அங்காள பரமேஸ்வரி
    X
    அங்காள பரமேஸ்வரி

    சமயபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அபிஷேகம்

    சமயபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அதைத் தொடர்ந்து, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    சமயபுரம் மாரியம்மன் கோவில் முன்புறம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று காலை கொள்ளிட கரையில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது.

    அதைதொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அதைத் தொடர்ந்து, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    தொடர்ந்து அருட்பிரசாதம் மற்றும் உணவைப் பொட்டலங்களாக கட்டி சமயபுரம் கோவிலை சுற்றியுள்ள சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை பூஜகர் சிவகுமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×