search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மாரியம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கபட்டபோது எடுத்த படம்.
    X
    மாரியம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கபட்டபோது எடுத்த படம்.

    ஊட்டி மாரியம்மன் கோவில் தேரோட்டம் ரத்து

    இதனால் மதியம் 1.55 மணிக்கு எளிமையான முறையில் சுவாமி புறப்பாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த மார்ச் 19-ந் தேதி பூச்சொரிதலுடன் தேர் திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது.நேற்று மாரியம்மன் கோவிலில் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    கொரோனா காரணமாக கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் மதியம் 1.55 மணிக்கு எளிமையான முறையில் சுவாமி புறப்பாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முககவசம் அணிந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நாளை மறுநாள் விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது.
    Next Story
    ×