search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கூத்தாண்டவர்
    X
    கூத்தாண்டவர்

    பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து

    தற்போது கொரோனா 2-வது அலை காரணமாக இந்த ஆண்டும் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை கோவில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூவாகம் போல் வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக கடந்த ஆண்டு இங்கு கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டது.

    தற்போது கொரோனா 2-வது அலை காரணமாக இந்த ஆண்டும் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை கோவில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. வழக்கமாக இந்த திருவிழாவுக்கு மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற பகுதிகளில் இருந்து திருநங்கைகள் அதிகளவில் பங்கேற்பார்கள். கொரோனா பரவல் காரணமாக 2-வது ஆண்டாக திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதால் திருநங்கைகள் ஏமாற்றம் அடைந் துள்ளனர்.
    Next Story
    ×