search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருபுவனத்தில் காளி திருநடன வீதி உலா
    X
    திருபுவனத்தில் காளி திருநடன வீதி உலா

    திருபுவனத்தில் காளி திருநடன வீதி உலா

    திருபுவனம் கீழ வீதியில் காமாட்சி அம்மன், பத்ரகாளியம்மன் கோவிலில் மகோற்சவ விழாவில் காளி திருநடன வீதி உலா 5 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாட்டால் காளி திருநடன வீதி உலா ஒருநாள் மட்டும் நடந்தது.
    கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கீழ வீதியில் காமாட்சி அம்மன், பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகோற்சவ விழா கடந்த 13-ந் தேதி தொடங்கியது.

    வழக்கமாக இந்த விழாவில் காளி திருநடன வீதி உலா 5 நாட்கள் நடைபெறும். அப்போது பக்தர்கள் தங்கள் வீடுகள் முன்பு காளிக்கு அர்ச்சனை செய்து வழிபடுவார்கள்.

    ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாட்டால் காளி திருநடன வீதி உலா நேற்று முன்தினம் ஒருநாள் மட்டும் நடந்தது. கடைவீதியில் மட்டும் இந்த வீதி உலா நடந்தது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    Next Story
    ×