என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கொட்டாரத்தில் சந்தன மாரியம்மன் கோவிலில் சித்திரை விஷூ விழா
Byமாலை மலர்15 April 2021 5:10 AM GMT (Updated: 15 April 2021 5:10 AM GMT)
கன்னியாகுமரி அருகே கொட்டாரத்தில் உள்ள சந்தனமாரி அம்மன் கோவிலில் சித்திரை விஷூ திருவிழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
கன்னியாகுமரி அருகே கொட்டாரத்தில் உள்ள சந்தனமாரி அம்மன் கோவிலில் சித்திரை விஷூ திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வருதல், கனி காணும் நிகழ்ச்சி, பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கப்பட்டது.
மாலையில் வடக்கு வாசல் மயான சுடலைமாடசாமி கோவிலில் ருத்ரபூமி பூஜை, சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா ஆகியவை நடந்தது.
அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் மாடன் பிள்ளை தர்மம் முத்தாரம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் காலை கனி காணும் நிகழ்ச்சியும், அம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியோடு சாமி தரிசனம் செய்தனர்.
அஞ்சுகிராமம் அழகிய விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. காலையில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சன்னதி அருகில் செல்லாமல் தூரத்தில் இருந்தே கனி காணும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியுடன் நின்று சாமி தரிசனம் செய்தனர். காணிமடம் யோகிராம்சுரத்குமார் மந்திராலயத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி கனி காணும் நிகழ்ச்சி, சிறப்பு பூஜைகள் நடந்தது. கொரோனா நோயில் இருந்து மக்கள் சுகமாக வாழவும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
மாலையில் வடக்கு வாசல் மயான சுடலைமாடசாமி கோவிலில் ருத்ரபூமி பூஜை, சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா ஆகியவை நடந்தது.
அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் மாடன் பிள்ளை தர்மம் முத்தாரம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் காலை கனி காணும் நிகழ்ச்சியும், அம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியோடு சாமி தரிசனம் செய்தனர்.
அஞ்சுகிராமம் அழகிய விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. காலையில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சன்னதி அருகில் செல்லாமல் தூரத்தில் இருந்தே கனி காணும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியுடன் நின்று சாமி தரிசனம் செய்தனர். காணிமடம் யோகிராம்சுரத்குமார் மந்திராலயத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி கனி காணும் நிகழ்ச்சி, சிறப்பு பூஜைகள் நடந்தது. கொரோனா நோயில் இருந்து மக்கள் சுகமாக வாழவும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X