search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவாய்மூர் தியாகராஜர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு
    X
    திருவாய்மூர் தியாகராஜர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு

    திருவாய்மூர் தியாகராஜர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு

    திருவாய்மூர் தியாகராஜர் கோவிலில் பைரவருக்கு திரவிய பொடி, மஞ்சள் பொடி, பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    வேளாங்கண்ணி அருகே திருக்குவளை வட்டம் திருவாய்மூரில் தியாகராஜர் கோவில் உள்ளது. இந்த கோவில் அஷ்டபைரவர் தலமாகவும் விளங்குகிறது. இங்கு சத்ரு சம்ஹார பைரவர், அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், கபால பைரவர், உன்மத்த பைரவர், பீஷண பைரவர் உள்ளிட்ட 8 பைரவர்கள் அருள்பாலித்து வருகின்றனர்.

    இந்த பைரவர்களுக்கு பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு திரவிய பொடி, மஞ்சள் பொடி, பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் பைரவருக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×