என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பங்குனி உத்திர தேரோட்டம்: பேரூர் பட்டீசுவரர் கோவிலில் கொடியேற்று விழா
Byமாலை மலர்20 March 2021 8:07 AM GMT (Updated: 20 March 2021 8:07 AM GMT)
பங்குனி உத்திர தேரோட்டத்தையொட்டி பேரூர் பட்டீசுவரர் கோவிலில் கொடியேற்று விழா நடைபெற்றது. வருகிற 24-ந் தேதி மாலை திருக்கல்யாணம் நடக்கிறது.
கோவையை அடுத்த பேரூர் பட்டீசுவரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா 10 நாட்கள் உற்சாகமாக நடைபெறும். இந்தாண்டு, பங்குனி உத்திர தேர்த்திருவிழா, நேற்று காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, மாலையில் யாகசாலை பூஜை, மலர் பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
27-ந் தேதி வரை 8 நாட்களுக்கு காலையில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும், யாகசாலை பூஜை நடக்கிறது. வருகிற 24-ந் தேதி மாலை திருக்கல்யாணம் நடக்கிறது.
25-ந் தேதி மாலை பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல், மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.
27-ந் தேதி இரவு தெப்பத் திருவிழா நடக்கிறது. 28-ந் தேதி, அதிகாலை நடராஜருக்கு மகா அபிஷேகம், காலை 7 மணிக்கு மேல், பங்குனி உத்திர தரிசன காட்சி, திருவீதி உலா ஆகியவை நடக்கிறது. இரவு 8 மணிக்கு கொடியிறக்குதலுடன் விழா முடிகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
27-ந் தேதி வரை 8 நாட்களுக்கு காலையில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும், யாகசாலை பூஜை நடக்கிறது. வருகிற 24-ந் தேதி மாலை திருக்கல்யாணம் நடக்கிறது.
25-ந் தேதி மாலை பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல், மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.
27-ந் தேதி இரவு தெப்பத் திருவிழா நடக்கிறது. 28-ந் தேதி, அதிகாலை நடராஜருக்கு மகா அபிஷேகம், காலை 7 மணிக்கு மேல், பங்குனி உத்திர தரிசன காட்சி, திருவீதி உலா ஆகியவை நடக்கிறது. இரவு 8 மணிக்கு கொடியிறக்குதலுடன் விழா முடிகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X