என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பழையனூர் சுந்தர மகாலிங்கம் கோவில் தேரோட்டம்
Byமாலை மலர்15 March 2021 5:52 AM GMT (Updated: 15 March 2021 5:52 AM GMT)
பழையனூர் சுந்தர மகாலிங்கம் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
சிவகங்கை மாவட்டம் பழையனூர் கிராமத்தில் அங்காளஈஸ்வரி உடனமர் சுந்தரமகாலிங்கம், சந்தன கருப்பண சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா 5 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டு திருவிழா கடந்த 11-ந்தேதி இரவு கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதை ெதாடர்ந்து தினமும் சுவாமி, அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு சுந்தரமகாலிங்கம் பிரியாவிடையுடன் காளை வாகனத்திலும், அங்காளஈஸ்வரி அம்மன் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மனும் எழுந்தருளினார்கள். அதன்பிறகு மாலை 4 மணியளவில் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேர் உலா வந்தது பார்க்க கண்கொள்ள காட்சியாக இருந்தது. மாலை 6.30 மணிக்கு திருத்தேர் நிலையை வந்தடைந்தது.இன்று (திங்கட்கிழமை)இரவு தேர் தடம் பார்த்தல், பூஜை பெட்டி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இந்த ஆண்டு திருவிழா கடந்த 11-ந்தேதி இரவு கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதை ெதாடர்ந்து தினமும் சுவாமி, அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு சுந்தரமகாலிங்கம் பிரியாவிடையுடன் காளை வாகனத்திலும், அங்காளஈஸ்வரி அம்மன் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மனும் எழுந்தருளினார்கள். அதன்பிறகு மாலை 4 மணியளவில் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேர் உலா வந்தது பார்க்க கண்கொள்ள காட்சியாக இருந்தது. மாலை 6.30 மணிக்கு திருத்தேர் நிலையை வந்தடைந்தது.இன்று (திங்கட்கிழமை)இரவு தேர் தடம் பார்த்தல், பூஜை பெட்டி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X