search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிறப்பு அலங்காரத்தில்  வேதாரண்யேஸ்வரர்
    X
    சிறப்பு அலங்காரத்தில் வேதாரண்யேஸ்வரர்

    வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக விடையாற்றி விழா

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசி மக விடையாற்றி விழா நடந்தது. விழாவில் சந்திரசேகரர் மற்றும் மனோன்மணி சமேதமாய் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 8-ந் தேதி மாசி மக உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 28 நாட்கள் நடைபெற்ற மாசி மக உற்சவத்தில் திருக்கதவு அடைக்க, திறக்கும் நிகழ்ச்சி, தேரோட்டம், தெப்ப உற்சவம் போன்ற முக்கிய விழாக்கள் நடைபெற்றன.

    இந்த நிலையில் மாசி மக விடையாற்றி விழா நடந்தது.விழாவில் சந்திரசேகரர் மற்றும் மனோன்மணி சமேதமாய் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. சாமி ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டு பெண்கள் மற்றும் பக்தர்கள் நலுங்கு பாடல் பாடப்பட்டு மங்கல இசை முழங்க சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×