search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அய்யா வைகுண்டர்
    X
    அய்யா வைகுண்டர்

    தடிக்காரன்கோணம் அய்யா வைகுண்டசாமி நிழல் தாங்கலில் திருஏடு வாசிப்பு விழா

    தடிக்காரன்கோணம் அண்ணாநகர் பகுதியில் உள்ள அய்யா வைகுண்டசாமி நிழல் தாங்கலில் திரு ஏடு வாசிப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    தடிக்காரன்கோணம் அண்ணாநகர் பகுதியில் உள்ள அய்யா வைகுண்டசாமி நிழல் தாங்கலில் திரு ஏடு வாசிப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் மாலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, ஏடு வாசிப்பு தொடக்கம், தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது. விழாவில் நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, திருஏடு வாசிப்பு, அன்னதானம் நடக்கிறது. விழா நாட்களில் மாலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, திருஏடு வாசிப்பு, அன்னதானம் நடக்கிறது.

    12-ந் தேதி மாலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, இரவு 7 மணிக்கு திருக்கல்யாண ஏடு வாசிப்பு மற்றும் அய்யாவுக்கு சூழல் கொண்டு வருதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடக்கிறது. விழாவின் கடைசி நாளான 14-ந் தேதி காலை 9 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, அன்னதானமும், மாலை 4 மணிக்கு வாகன பவனியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், பொதுமக்களும் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×