search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராஜ அலங்காரத்தில் சவுமியநாராயண பெருமாள்
    X
    ராஜ அலங்காரத்தில் சவுமியநாராயண பெருமாள்

    ராஜ அலங்காரத்தில் சவுமியநாராயண பெருமாள்

    சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் மாசி மக தெப்ப திருவிழாவை முன்னிட்டு சவுமியநாராயண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் ராஜ அலங்காரத்தில் கோவில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.
    திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக தெப்ப திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    இதையொட்டி இந்தாண்டு இந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் நேற்று சவுமியநாராயண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் ராஜ அலங்காரத்தில் கோவில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×