என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஈரோடு சூரம்பட்டி மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா
Byமாலை மலர்25 Feb 2021 6:41 AM GMT (Updated: 25 Feb 2021 6:41 AM GMT)
ஈரோடு சூரம்பட்டியில் பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவில் குண்டம் விழாவில் கோவிலின் பூசாரிகள் மற்றும் விழாக்குழுவை சேர்ந்த பக்தர்கள் உள்ளிட்டோர் தீ மிதித்தார்கள்.
ஈரோடு சூரம்பட்டியில் பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் பொங்கல் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 16-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவில் குண்டம் பற்ற வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய கரும்புகளை (விறகு) அடுக்கி வைத்து தீ பற்ற வைக்கப்பட்டது. நேற்று அதிகாலையில் குண்டம் தயாரானாது.
கோவிலின் தலைமை பூசாரி குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் அவர் தீ மிதித்து குண்டம் விழாவை தொடங்கி வைத்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குண்டம் இறங்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கோவிலின் பூசாரிகள் மற்றும் விழாக்குழுவை சேர்ந்த பக்தர்கள் உள்ளிட்டோர் தீ மிதித்தார்கள். விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் மாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) நடக்கும் மறுபூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
கோவிலின் தலைமை பூசாரி குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் அவர் தீ மிதித்து குண்டம் விழாவை தொடங்கி வைத்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குண்டம் இறங்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கோவிலின் பூசாரிகள் மற்றும் விழாக்குழுவை சேர்ந்த பக்தர்கள் உள்ளிட்டோர் தீ மிதித்தார்கள். விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் மாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) நடக்கும் மறுபூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X