search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சித்தூரில் வரசித்தி விநாயகர்
    X
    சித்தூரில் வரசித்தி விநாயகர்

    சித்தூரில் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

    சித்தூர் முருக்கம்பட்டு பகுதியில் 1832-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமைவாய்ந்த வரசித்தி விநாயகர் கோவிலில் 12 வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    சித்தூர் முருக்கம்பட்டு பகுதியில் 1832-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமைவாய்ந்த வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் 12 வருடங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி காலையில் வரசித்தி விநாயகருக்கு சந்தனம், பால், நெய், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து மூலவர் குரு தட்சிணாமூர்த்தி மற்றும் விஷ்ணு, துர்கா தேவி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை, இரண்டாம் கால பூஜை, கலச அபிஷேகம், மூலஸ்தான அபிஷேகம் நடந்தது. பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் வரசித்தி விநாயகர், குரு தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, துர்கா தேவி அம்மன் ஆகிய உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, புஷ்பப் பல்லக்கில் வீதி உலா நடந்தது.
    Next Story
    ×