என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சித்தூரில் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்24 Feb 2021 8:16 AM GMT (Updated: 24 Feb 2021 8:16 AM GMT)
சித்தூர் முருக்கம்பட்டு பகுதியில் 1832-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமைவாய்ந்த வரசித்தி விநாயகர் கோவிலில் 12 வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சித்தூர் முருக்கம்பட்டு பகுதியில் 1832-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமைவாய்ந்த வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் 12 வருடங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி காலையில் வரசித்தி விநாயகருக்கு சந்தனம், பால், நெய், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மூலவர் குரு தட்சிணாமூர்த்தி மற்றும் விஷ்ணு, துர்கா தேவி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை, இரண்டாம் கால பூஜை, கலச அபிஷேகம், மூலஸ்தான அபிஷேகம் நடந்தது. பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் வரசித்தி விநாயகர், குரு தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, துர்கா தேவி அம்மன் ஆகிய உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, புஷ்பப் பல்லக்கில் வீதி உலா நடந்தது.
தொடர்ந்து மூலவர் குரு தட்சிணாமூர்த்தி மற்றும் விஷ்ணு, துர்கா தேவி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை, இரண்டாம் கால பூஜை, கலச அபிஷேகம், மூலஸ்தான அபிஷேகம் நடந்தது. பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் வரசித்தி விநாயகர், குரு தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, துர்கா தேவி அம்மன் ஆகிய உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, புஷ்பப் பல்லக்கில் வீதி உலா நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X